கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம்

கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-10-03 18:56 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கருப்பு கொடியேந்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். உத்தரபிரதேசம் மாநிலம், லக்கிம்பூர்கேரி மாவட்டத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காரணமான மத்திய உள்துறை இணை மந்திரியுடைய மகனின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்