லாரியில் மணல் கடத்திய டிரைவர் கைது

தர்மபுரியில் லாரியில் மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-06-25 21:10 IST

தர்மபுரி டவுன் போலீசார் வெண்ணாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 35) என்பதும், மணல் கடத்தியதும் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரைவர் பிரபுவை கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்