மது பதுக்கி விற்றவர் கைது

Update: 2023-10-13 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான போலீசார் சாலிவாரம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக அந்தேவனப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்