சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு புகார்

மாற்றுத்திறனாளிகள் குறித்து இழிவாக பேசிய புகாரில் மகாவிஷ்ணு ஏற்கெனவே கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2024-09-08 14:54 GMT

சென்னை,

ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு சென்னையில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய பிற்போக்குத்தனமான கருத்துகளால் சர்ச்சையில் சிக்கினார். அவரது பேச்சு குறித்து மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைதாப்பேட்டை காவல்துறையினர், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் தலைவர் சரவணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் விஷ்ணு மீது தற்பொழுது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஷ்ணுவிடம் விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்