மது விற்ற முதியவர் கைது

மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-07 18:45 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் அடுத்துள்ள உமையத்தலைவன்பட்டி பகுதியில் திருவேங்கடம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் முதியவர் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், திருவேங்கடம் மேலத்தெருவை சேர்ந்த மேடையாண்டி (வயது 60) என்பதும், அந்த பகுதியில் மது விற்றதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேடையாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்