இன்சூரன்ஸ் நிறுவன சேவை குறைபாடு விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.84,693 வழங்க வேண்டும்நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தனியார் இன்சூரன்ஸ் நிறுவன சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.84,693 வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2023-01-10 18:45 GMT

நாகர்கோவில்:

தனியார் இன்சூரன்ஸ் நிறுவன சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.84,693 வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

தனியார் இன்சூரன்ஸ்

தக்கலையை சேர்ந்தவர் ராதிகா. இவர் தனது குடும்பத்திற்காக ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் அவரது கணவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்த ராதிகா வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ரூ.84,693 வழங்க உத்தரவு

வழக்கை விசாரித்த குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை கட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சிகிச்சைக்காக ஏற்கனவே செலவழித்த ரூ.59,693, நஷ்ட ஈட்டு தொகை ரூ.20 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.84.693-ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்