500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-11-03 18:45 GMT

மதுக்கரை

கோவையை அடுத்த மதுக்கரை குமிட்டிப்பதி அருகே வந்த வேனை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 10 மூட்டைகளில் 50 கிலோ எடை கொண்ட மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. உடனே அந்த வாகனத்தை ஓட்டி வந்த கங்காதரனிடம் (வயது 71) போலீசார் விசாரித்தனர்.

இதில் ரேஷன் அரிசியை கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. உடனே கங்காதரனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத் திய வாகனம் மற்றும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்