முதியவருக்கு 5 ஆண்டு சிறை

முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-04-17 19:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் போஸ் (வயது 62). கூலி தொழிலாளியான இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து போஸ்சை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து போசுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்