5 பேர் மரணம்: தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் - எல்.முருகன்

விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

Update: 2024-10-07 05:25 GMT

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்குள்ளாகினர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் மற்றும் கடும் வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் மரணம் வருத்தம் அளிக்கிறது. போதிய நடவடிக்கை எடுக்க தவறியதால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சரியான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததால் இதுபோன்ற விளைவு ஏற்பட்டுள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்