ரூ.5¼ லட்சம் மோசடி

ஆஸ்திரேலியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5¼ லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-28 18:45 GMT

ஆஸ்திரேலியா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5¼ லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை வாங்கி தருவதாக

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வளன் நகரை சேர்ந்தவர் ராயர்(வயது 43). இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முகநூல் பக்கத்தில்(பேஸ்புக்) ஆஸ்திரேலியா நாட்டில் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். மேலும் அதில் இருந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது எதிர் முனையில் பேசியவர் கூறியபடி ராயர் 16 தவணைகளில் ரூ.5 லட்சத்து 26 ஆயிரத்து 600-ஐ செலுத்தியுள்ளார். பணத்தை பெற்று கொண்டவர்கள் அதன்பின்னர் ராயருடன் தொடர்பு கொள்ள வில்லையாம்.

போலீசார் விசாரணை

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராயர் இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்