எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்குப் பிறகு மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கூறப்படுகிறது.

Update: 2024-09-04 13:29 GMT

கோப்புப்படம் 

புதுக்கோட்டை,

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி உள்ளது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு கடல்பகுதியில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

படகில் இருந்த ஒரு மீனவருக்கு உடல்நலம் குன்றிய நிலையில், ஒரு படகில் இருந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுவித்தனர். கைது செய்யப்பட்ட 4 மீனவர்கள் விசாரணைக்குப் பிறகு மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்