புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

கோவை ஆர்.எஸ்.புரத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-30 02:30 GMT

கோவை

கோவை ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் போலீசார் ஒண்டிப்புதுார், தடாகம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற சுப்பால் சிங், பாஸ்கர், தனலட்சுமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 267 புகையிலை பொருள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்