பொங்கல் பண்டிகைக்கான 2ம் நாள் ரெயில் டிக்கெட் முன்பதிவு; 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் ஐந்தே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.

Update: 2023-09-14 04:14 GMT

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி 2ம் நாள் ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. ஜனவரி 12ம் தேதி பயணம் செய்வோர் இன்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில், பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இதில் குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் ஐந்தே நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தன.

Tags:    

மேலும் செய்திகள்