மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 15 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-04 18:03 GMT

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்ற 15 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 15 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 300 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்