12,706 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர்

12,706 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர்

Update: 2023-03-14 18:32 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் 12,706 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர்

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 134 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 13,030 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 12,706 பேர் தேர்வு எழுதினர். 324 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வில் மாணவ, மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தலைமையில் 130 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு காணித்தனர். மாணவ- மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்