தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-01 14:08 GMT

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்யும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்