போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி

போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி

Update: 2022-05-26 18:30 GMT

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் குழந்தைகள் நல போலீசாருக்கான ஒருநாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. புத்தாக்க பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய போலீஸ் சூப்பிரண்டு மனோகர் மாவட்டத்தில் சட்டபூர்வமாக பாதிக்கப்பட்ட குழந்தைகள் நிவாரணம் பெற போலீசார் சிறப்பாக செயல்படுவதாகவும், மேலும் சிறப்பாக செயல்பட இந்த புத்தாக்க பயிற்சி ஊக்கமளிக்கும் என்றும் கூறினார். புத்தாக்க பயிற்சியில் மாவட்ட போலீஸ் அதிகாரிகள், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சட்டம் சார்ந்த நன்னடத்தைஅலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்