கவர்னர் உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல்

சித்தராமையா சார்பில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.

Update: 2024-08-18 22:48 GMT

பெங்களூரு,

மைசூருவில் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் சித்தராமையாவுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தான் எந்த தவறையும் செய்யவில்லை எனவும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் சித்தராமையா கூறி வந்தார்.

இந்த நிலையில் கவர்னரின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர சித்தராமையா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் சார்பில் ஆஜராகி வாதாட சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் பெங்களூரு வந்துள்ளனர். சித்தராமையா சார்பில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி இன்று மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க நீதிபதியிடம் முறையிட திட்டமிட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்