வட மாநிலங்களில் தொடரும் கனமழை: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.;

Update:2023-07-12 10:20 IST
வட மாநிலங்களில் தொடரும் கனமழை: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

டெல்லி,

வட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரவ மழை தீவிரமடைந்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ரெயில், போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இமாச்சலபிரதேசத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவம் மீட்புப்பணியில் களமிறக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் கனமழை வெள்ளத்தால் மழைப்பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்