குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரெயிலை அறிமுகம் செய்கிறது இந்தியன் ரெயில்வே

குஜராத் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியன் ரெயில்வே, டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரெயிலை அறிமுகம் செய்கிறது.

Update: 2023-02-05 09:25 GMT

image courtesy: PIB India twitter

புதுடெல்லி,

குஜராத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தியன் ரெயில்வே "பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரெயிலை" அறிமுகப்படுத்தவுள்ளது.

"ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்' என்ற திட்டத்தின் கீழ், அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த சுற்றுலா ரெயில் தனது முதல் சுற்றுப்பயணத்தை வருகிற பிப்ரவரி 28 அன்று டெல்லி சப்தர்ஜங் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்குகிறது.

முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசியுடன் 8 நாள் சுற்றுப்பயணத்தை இந்த அதிநவீன பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரெயில், மேற்கொள்ள உள்ளது. இந்த ரெயிலில் நான்கு முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், ஒரு பேண்ட்ரி மற்றும் இரண்டு ரெயில் உணவகங்கள் உள்ளன. ஒரே நேரத்தில் குறைந்தது 156 பயணிக்கும் வகையில் இந்த ரெயில் அமைந்துள்ளது.

குஜராத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த சுற்றுலா ரெயில், குஜராத்தின் முக்கிய புனித யாத்திரைகள் மற்றும் பாரம்பரிய தளங்களுக்கு பயணிக்க உள்ளது. ஒற்றுமை சிலை, சம்பானேர், சோம்நாத், துவாரகா, நாகேஷ்வர், பெய்ட் துவாரகா, அகமதாபாத், மோதேரா மற்றும் படான் ஆகிய இடங்களுக்கு செல்கிறது.

குருகிராம், ரேவாரி, ரிங்காஸ், புல்லேரா மற்றும் அஜ்மீர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். 

Tags:    

மேலும் செய்திகள்