உத்தரபிரதேசத்தில் 5 பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவோம் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர்.

Update: 2024-08-16 01:28 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 22 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரை அதே கிராமத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தொடர்ந்து அதனை வீடியோவும் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 9-ந்தேதி நடந்துள்ளது. இதனை வெளியே யாரிடமாவது சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன், கொலை செய்துவிடுவோம் என்றும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர்.

5 பேர் கொண்ட கும்பலால் பாதிக்கப்பட்ட இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளான 5 பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்