இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.2 ஆக பதிவு

இமாசல பிரதேசத்தில் இன்று காலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

Update: 2023-01-14 00:51 GMT



தர்மசாலா,


இமாசல பிரதேசத்தின் தர்மசாலா நகரில் இருந்து 22 கி.மீ. தொலைவில் சம்பா என்ற பகுதியில் இன்று காலை 5.17 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 3.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள மக்கள் சற்று அச்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்