உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்த வாரம் ஜம்மு பயணம்

ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-01-06 01:38 GMT

டெல்லி,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த மாதம் 21ம் தேதி பாதுகாப்புப்படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்பிச்சென்ற நிலையில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து கடந்த 2ம் தேதி உள்துறை மந்திரி அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, போலீசார் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், அமித்ஷா அடுத்தவாரம் ஜம்மு செல்ல உள்ளார். வரும் 9ம் தேதி (செவ்வாய்கிழமை) ஜம்மு செல்லும் அமித்ஷா எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புப்பணிகளை ஆய்வு செய்கிறார். அதன்பின், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.    

Tags:    

மேலும் செய்திகள்