குற்ற வழக்கில் தலைமறைவானவாலிபர் 4 ஆண்டுக்கு பிறகு கைது

குற்ற வழக்கில் தலைமறைவான வாலிபர் 4 ஆண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-26 18:45 GMT

மங்களூரு-

கேரள மாநிலம் தாயாம்பு பல்லுரு குடே ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சுமன்(வயது 34). இவரை கடந்த 2019-ம் ஆண்டு மங்களூருவில் நடந்த குற்ற வழக்கில் மங்களூரு வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். சுமன் மீது மங்களூரு வடக்கு, புறநகர், கிழக்கு, தெற்கு, மூடபித்ரி, பண்ட்வால் மற்றும் புஞ்சலகட்டே ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதன் பின்னர் சுமன் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.

இந்தநிலையில் மங்களூரு கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து மங்களூரு வடக்கு போலீசார் சுமனை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் மங்களூருவில் சுமன் பதுங்கி இருப்பதாக மங்களூரு வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுமனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்