தெலுங்கானாவில் மண் சரிந்து 10 பெண்கள் பலி

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.;

Update:2019-04-11 00:30 IST
மகபூப்நகர், 

தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் திலேர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்களில் 12 பெண்கள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிவேலைபார்த்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் படுகாயமடைந்த 2 பெண்களை உயிருடன் மீட்டனர்.

மேலும் செய்திகள்