நாமக்கல் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் சாவு-யார் அவர்? போலீசார் விசாரணை
நாமக்கல் பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் பலியானார்.;
நாமக்கல்:
நாமக்கல் பஸ் நிலையத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.