போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்ற பெண் கைது

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்ற பெண் கைது

Update: 2022-03-29 19:48 GMT
செம்பட்டு,மார்ச்.30-
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, பயணிகளை  இமிகிரேஷன் பிரிவு  அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில்  தஞ்சை மாவட்டம் மணக்கால் பகுதியைச் சேர்ந்த மீரா (வயது 37). தனது பாஸ்போர்ட்டில் சில பக்கங்களை அகற்றிவிட்டு போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஏர்போர்ட் போலீசார் அவரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.

மேலும் செய்திகள்