செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு
செங்கல்பட்டு மாவட்டத்தின் 5-வது போலீஸ் சூப்பிரண்டாக சுகுணாசிங் பதவியேற்று கொண்டார்.
இவர் மயிலாடுதுறையில் போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வந்தவர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற சுகுணாசிங்குக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.