பள்ளி மாணவியை திருமணம் செய்தவர் கைது

சிவகாசி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-03-10 01:44 IST
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிக்கும், திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வரும் முத்துராமலிங்கம் (வயது 25) என்பவருக்கும் கடந்த 4-ந்தேதி  சிவகாசி அருகே ஒரு கோவிலில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சமூகநலத்துறை அதிகாரி ராஜேஸ்வரி திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார், மணமகன் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தாா். 

மேலும் செய்திகள்