புதுக்கோட்டை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வருகிற 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் வருகிற 22-ந் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட 4 நாட்களும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். மேலும், அந்த நாட்களில் ஓட்டல் பார்கள் மற்றும் மதுபான கூடங்களும் மூடப்படும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.