மகனை ஏரியில் வீசி கொன்று பெண் தற்கொலை

மகனை ஏரியில் வீசி கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-28 21:01 GMT
பெலகாவி: பெலகாவி மாவட்டம் யலகோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யரகட்டே கிராமத்தை சேர்ந்தவர் பெல்லப்பா. இவரது மனைவி சேவந்தி பியாடி(வயது 32). இந்த தம்பதியின் மகன் மகாந்தேஷ் (12). இந்த சிறுவன் மாற்றுத்திறனாளி ஆவான். இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக மாற்றுத்திறனாளி மகனை பெற்றெடுத்து இருப்பதாக கூறி சேவந்தியை பெல்லப்பா அடித்து, உதைத்து தாக்கியதாகவும், வேறு திருமணம் செய்ய போவதாகவும் சொல்லி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சேவந்தி மனம் உடைந்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையில் கிராமத்திற்கு அருகே உள்ள ஏரியில் தனது மகன் மகாந்தேசை வீசி கொன்றுவிட்டு, சேவந்தியும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து யலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்