கோவை
கோவையில் நேற்று முன்தினம் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களை சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்து 297 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 112 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 594 ஆக உயர்ந்து உள்ளது.
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது முதியவர், 70 வயது ஆண் என 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் 2 ஆயிரத்து 466 பேர் இறந்து உள்ளனர். தற்போது 1,237 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.