18 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 14 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 263 பேர் மட்டுமே கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 883 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது.