ஒரே நாளில் 525 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,987 ஆக அதிகரிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 444 ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2021-06-08 18:56 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 444 ஆக அதிகரித்து உள்ளது.
525 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 18 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்து 462 ஆக உயர்ந்தது.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 525 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 987 ஆக அதிகரித்து உள்ளது.
326 பேர் சாவு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 882 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 31 ஆயிரத்து 224 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 6 ஆயிரத்து 437 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 322 பேர் பலியாகி இருந்தனர். நேற்று நாமக்கல், பரமத்திவேலூர், நாமகிரிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த 4 பேர் இறந்தனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்