ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆயிரத்து 704 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 61 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், 5 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் 2 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகள் வரவேண்டியது உள்ளது.