எந்திரங்கள் திருடிய 2 பேர் கைது

தொழிற்கூடத்தில் எந்திரங்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-29 19:57 GMT
விருதுநகர், 
விருதுநகர் பெரியார் பாளையத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 29). இவர் இந்நகர் புறவழிச்சாலையில் தொழிற்கூடம் வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு தொழிற்கூடத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து திறந்து பார்த்தபோது தொழிற்கூடத்தில் இருந்த ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள 3 எந்திரங்கள் திருடு போயிருந்தது. இதுபற்றி அந்தபகுதியில் விசாரித்தபோது அய்யனார் நகரை சேர்ந்த சக்திவேல் (27), சசிகுமார் (25) ஆகிய இருவரும் நள்ளிரவில் அந்த எந்திரங்களை கொண்டு சென்றதாக தகவல் தெரிவித்தனர். இது பற்றி ராஜீவ்காந்தி இந்நகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் சசிகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து திருட்டு போன 3 எந்திரங்களையும் மீட்டனர்.

மேலும் செய்திகள்