திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 233 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

Update: 2021-04-28 19:20 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரு பெண் போலீஸ் ஏட்டு மற்றும் 78 பெண்கள் உள்பட மேலும் 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 
இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 263 ஆக உயர்ந்தது.
இதற்கிடையே 228 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,612 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்