ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையத்தில் உள்ள தெற்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(வயது 40). கூலித்தொழிலாளியான இவர் சின்னவளையம் பெரிய ஏரிக்கு சென்றபோது தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்தார். நேற்று அவருடைய உடல் ஏரியில் மிதந்தது. இதனை அங்கு குளிக்க சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற ஜெயங்கொண்டம் போலீசார், கண்ணனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.