தாராபுரம்
தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிாிவு போலீஸ் இன்ஸ்பெக்டா் விநாயகம் தலைமையில் போலீசாா் நேற்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது தாராபுரம் 5 காா்னாில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடன் அங்கு விரைந்து சென்ற போலீசாா் அங்கு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் காலை 7 மணிக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தது தொியவந்தது. மேலும் அவா்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ததும் தொியவந்தது. விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சோ்ந்த கண்ணன் வயது50 மற்றும் புதுக்கோட்டையை சோ்ந்த காா்த்திக் 32 என்பதும் தொியவந்தது. அவா்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 41 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.