மாநகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
மாநகராட்சி அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
திருப்பூர்,
கொரோனா பரவி வரும் நிலையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கம், வாகனம் மற்றும் அலுவலக வளாக பகுதியில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தேர்தல் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வீடு, வீடாக தபால் வாக்குப்பதிவு செய்ய அதிகாரிகள் குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அவர்களிடம் அறிவுறுத்தினார்.