தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி சஞ்சய் பன்சோடேவுக்கு கொரோனா

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரி சஞ்சய் பன்சோடேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-07-26 20:52 GMT
மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் மந்திரிகள் அடுத்தடுத்து கொரோனா வைரசின் பிடியில் சிக்கி வருகின்றனர்.

ஏற்கனவே தேசியவாத காங்கிரசின் ஜிதேந்திர அவாத், தனஞ்சய் முண்டே, காங்கிரசின் அசோக் சவான், அஸ்லம் சேக், சிவசேனாவின் அப்துல் சத்தார் ஆகியோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தேசியவாத காங்கிரசை சேர்ந்த மாநில சுற்றுச்சூழல் மற்றும் உணவு, மருந்து நிர்வாகத்துறை இணை மந்திரி சஞ்சய் பன்சோடே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

6-வது மந்திரி

சஞ்சய் பன்சோடே லாத்தூர் மாவட்டத்தில் உள்ள உட்கிர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். நேற்றுமுன்தினம் அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருந்தது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மந்திரிகளின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து உள்ளது. சஞ்சய் பன்சோடே கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3-வது தேசியவாத காங்கிரஸ் மந்திரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்