கார் மோதி கட்டிட தொழிலாளி பலி

தாம்பரம் அருகே உள்ள கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கார் மோதி பலி.

Update: 2017-06-09 21:18 GMT
வண்டலூர், 

தாம்பரம் அருகே உள்ள கோவிலம்பாக்கம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி (வயது 65). கட்டிட தொழிலாளி. இவர் மறைமலைநகரை அடுத்த பேரமனூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பேரமனூர் அருகே சாலையை கடக்கும் போது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற கார், கண் இமைக்கும் நேரத்தில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

 இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்