அரூரில் பலத்த சூறைக்காற்று மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

அரூரில் பலத்த சூறைக்காற்று மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன

Update: 2017-06-07 22:30 GMT
அரூர்,

அரூரில் நேற்று மாலை திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் சாலைகளில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அருகே இருந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளில் ஒதுங்கி நின்றனர்.

சூறைக்காற்றின்போது அரூர் பை-பாஸ் சாலையில் 2 மரங்கள் மற்றும் 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அப்போது அந்த பகுதியில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததால் அந்த பகுதியில் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் அங்கு வந்ததும் சீரமைப்பு பணி நடைபெற்றது. 

மேலும் செய்திகள்