கம கம கிராமத்து மீன் குழம்பு..!

தேவையான பொருட்கள் : மீன் (எந்த மீனாகவும் இருக்கலாம்), கடுகு, சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, புளி, உப்பு, நல்லெண்ணெய்
அரைப்பதற்கு : தேங்காய், சின்ன வெங்காயம்:வறுத்து அரைக்க : வரமிளகாய், தனியா, சீரகம்
செய்முறை : மீனை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
புளியை நீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து, புளி சாரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, சூடு ஆறியதும் அதனை அம்மி (இல்லையென்றால்) மிக்சியில் தண்ணீர் சேர்த்து மென்மையாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.
பின் இதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை கலந்து தனியாக வைக்கவும்.
பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
குழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும்போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும். சூப்பரான கிராமத்து மீன் குழம்பு ரெடி