பவுர்ணமி வழிபாடு: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி


பவுர்ணமி வழிபாடு: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
x

மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற அனுமதி இல்லை.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பக்தர்கள் 4 நாட்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை, கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலையேற அனுமதி இல்லை. இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story