மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்
மழைக்காலங்களில் பலருக்கு சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. கொசுக்கள் மற்றும் சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளாலும் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.
சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் மழைக்கால நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
நோய் பாதிப்பை தவிர்க்க, பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும்.
கொதிக்க வைத்த வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது மிகச்சிறந்தது
பழங்கள் மற்றும் காய்கறிகள், கீரைகள் இவைகளை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.
முதல் நாள் மீதமான உணவை மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஈ, பூச்சிகள் மொய்த்திருக்கும் தெரு உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்கருகில் நல்ல தண்ணீர் அல்லது அசுத்தமான தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டு ஜன்னல்கள், கதவுகளில் கொசு வலைகள் பயன்படுத்துவது நல்லது.
மழைநீரில் நனைந்தால் அல்லது குளித்தால் தலையை ஈரம் நீங்க நன்றாக துடைக்க வேண்டும்.