திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் புகைப்பட தொகுப்பு:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
வாகன வீதிஉலாவின்போது, பக்தர்கள் திரளானோர் பஜனை பாடல்களை பாடினர். ஆண், பெண் கலைஞர்கள் நாட்டிய, நடன, இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.