பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி எப்படி செய்வது?
தேவையான அளவு உளுந்தம்பருப்பு, அரிசி மாவு, துருவிய வெல்லம், தேங்காய்ப் பால், துருவிய தேங்காய், நல்லெண்ணெய், வெந்தயம், ஏலக்காய்ப்பொடி, சுக்கு பொடி
முதலில் உளுந்தை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
பின்னர் உளுந்துடன் வெந்தயம் சேர்த்து 4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
இரண்டும் நன்கு உறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்துவைக்கப்பட்ட உளுந்து மற்றும் வெந்தயத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஊற்றிக்கொள்ளவும்.
பிறகு அதில் நுணுக்கிய ஏலக்காய், வெல்லம், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
அடுத்ததாக அதில் 2 ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து 15 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
கஞ்சி தயாராகியவுடன் மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்.
பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்த்து இறக்கினால் சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.