தீபாவளி வந்தாச்சு..வீட்டிலேயே சுவையான அதிரசம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : பச்சரிசி மாவு , வெல்லம், எண்ணெய் தேவையான அளவு, தண்ணீர், நெய், சுக்கு பொடி, ஏலக்காய் போடி
பச்சரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை நன்கு வடித்து சுத்தமான துணியில் பரப்பி 40 நிமிடம் வரை உலர விடவும்.
பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும். அடுத்ததாக சல்லடையில் சலித்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து வெல்லம் சேர்க்கவும், பின் வெல்லம் கரைந்ததும் அடுப்பை நிறுத்தி விட வேண்டும்.
வெல்லம் நன்கு கரைந்து பாகுப்போல் வந்ததும், வடிகட்டி மறுபடியும் அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி 10 லிருந்து 12 நிமிடம் காய்ச்சவும்.
பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டி தட்டாமல் கிளறவும்.
நன்கு ஒன்று சேர்ந்ததும் நெய், சுக்கு மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். சூடு ஆறியதும் ஒரு வெள்ளைத்துணி போட்டு மூடி வைக்கவும்.
மறுநாள் வாணலியில் எண்ணெய் காயவைத்து நன்கு சூடானதும், மாவை எடுத்து உருண்டையாக்கி லேசாகத் தட்டி எண்ணெயில் போடவேண்டும்.
லேசாக சிவந்ததும் திருப்பி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறிக்கொள்ளலாம். சுவையான வெல்ல அதிரசம் தயார்.
சுட்ட அதிரசத்தை ஒன்றன் மேல் ஒன்றாக வைக்காமல் தனித்தனியாக வைக்கவும். ஒட்டிக்கொள்ளாமல் இருக்கும்.