அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?


அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?
x

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.320 உயர்ந்துள்ளது.

சென்னை,

கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்த தங்கம் விலை, அதே மாதம் 22-ந்தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததன் எதிரொலியாக அன்றைய தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர ஆரம்பித்து இருக்கிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 24-ந்தேதி ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டது. தொடர்ந்து விலை அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தங்கத்தின் விலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story